வேப்பெண்ணெய் சேமித்து தரும் 30 ஆயிரம் கோடி.

 தழைச்சத்திற்கு(N) விவசாயிகள் இடும் யூரியாவில் பாதிக்குமேல் வேகமாக வெளியேறியும்/ காற்றில் கலந்தும்/நுன்னியிரிகளால் ரசாயனமாற்றம் செய்யப்பட்டு பயிருக்கு பயன்படாமல் போகிறது. வேப்பெண்ணெய் வேப்பம்புன்னாக்கு கலந்து இடுவதால் இழப்புகள் கட்டுபடுத்தபட்டு 30% வரை சேமிக்கபடுகிறது. அதாவது ஏக்கருக்கு 3 மூட்டை இட வேண்டிய இடத்தில் 2 மூட்டை போதுமானது. அல்லது 3 மூட்டை இடும்போது 4 மூட்டைக்கான விளைச்சல் கிடைக்கிறது..!! மறைமுக பலனாக பல நோய் தாக்குதல்களும் தடுக்கப்படுகிறது.

இடும் முறை : (ஒரு மூட்டைக்கு) 1/2  லிட்வேப்பெண்ணெய் +1/2 கிலோ (தேவைகேற்ப) வேப்பம்புண்ணாக்கு கலந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும்
உரசாக்குகளை (பிளாஸ்டிக்) விரித்து அதன்மேல் யூரியாவை கொட்டி, பேஸ்டிஐ பிசரி 1/2 மணி நேரம் மூட்டையில் பிடித்து வைக்கலாம்/பயன்படுத்தலாம். யூரியா மட்டும் அல்ல, அமோனியா முதலான தழைச்சத்து உரங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். கடைகளில் கிடைக்கும் யூரியா கோட்டை விட இது சிறப்பாக இருக்கும்.

இந்த முறையால் விவசாயிக்கு கிடைத்த லாபத்தை பார்த்தோம். நாட்க்கு..??!! இந்தியாவின் வருட உர மானிய நிதிச்சுமை 1 லட்சம்  கோடிக்கு மேல். 30% யூரியா சேமிக்கப்பட்டால் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னியசொலவணி அப்படியே மீதி! அதற்குமேல் உள்நாட்டு மானிய நிதிச்சுமை சேமிப்பு !! கிட்டதட்ட 30 ஆயிரம்  கோடி உள்நாட்டு யூரியா தேவை 1.96 டன்னாக குறையும்.

(உர உற்பத்தி ஆலையிலேயே கோட்டிங் செய்யலாம். ஆனால் இன்று வரை செய்யவில்லை)

உள்நாட்டு தேவை              2.8 கோடி டன்        ரூ.8.000 /டன் (ரீ டெயில் விலை)
உள்நாட்டு உளற்பத்தி       2.2 கோடி டன்        ரூ.13.000 /டன் (உற்பத்தி விலை)
இறக்குமதி                             60 லட்சம் டன்       ரூ.23.000 /டன் (இறக்குமதி விலை)

வெளிநாட்டு விவசாயிகள் வேப்பெண்ணெய் நன்கு பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு விவசாயத்தின் ஓர் அங்கம. KVK மூலம் இவை அறிவுறுத்தப்பட்டாலும் போதிய விழிப்புணர்வு இல்லை. சமீபமாக விவசாயத்தில், ஆடு, மாடு வளர்ப்பில் வேப்பெண்ணெய் வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், உழவனுக்கும், நிலத்துக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.
                                                          -இணையதள செய்தியாளர் : சசிகுமார்